சினிமா
தைரியலட்சுமியான நிஷா கணேஷ்
சின்னத்திரை புகழ் நிஷா (‘பிக் பாஸ்’ புகழ் கணேஷ் வெங்கட்ராமின் மனைவி) சென்னையில் அயனாவரம் சிறுமிக்காக நடந்த நிகழ்ச்சியொன்றில் தன் வாழ்க்கையில் தான் அனுபவித்த பாலியல் தொல்லையைப் பற்றி
தைரியமுடன் பகிர்ந்து கொண்டார்.
அவர் கூறியதாவது: “என் அம்மா முழுநேர வேலைக்குப்போய் என்னைப் பார்த்துக் கொள்ள முடியாததால் வேறொருவருக்கு நான்
தத்துக்கொடுக்கப்பட்டேன்.
எனக்கு 10 வயது இருந்தபோது அவனுக்கு 60 வயது. என்னை தினமும் அடித்து பாலியல் சித்ரவதை செய்வான். அம்மாவிடம் கூற பயந்து நான் அவனிடம் கொடுமையை அனுபவித்து அவதிப்பட்டேன்.
பின் சொந்தக்காலில் நிற்கத் தொடங்கிய பின் வீட்டை விட்டு வெளியேறி என் வாழ்க்கையை நானே அமைத்துக் கொண்டேன்.
இப்பொழுது என் கணவர் கொடுத்த தைரியத்தினால் என் பிரச்சினைகளை உலகிற்கு சொல்கிறேன். பெண் குழந்தைகளின் மனதிலிருந்து முதலில் அந்த பயத்தைத்தான் நாம்
அகற்ற வேண்டும்” எனக் கண்ணீருடன் அவர் கூறியது அனைவரின் மனதையும் உருக்கியது.