சினிமா செய்திகள்

நாமினேஷனில் இருந்து தப்பிக்க காயினை பயன்படுத்திய நிரூப்புக்கு ஏற்பட்ட திடீர் சிக்கல்!

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாமினேஷனில் இருந்து தப்பிக்க நிருப் தனது காயினை பயன்படுத்திய நிலையில் அதிலும் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய ஒரு சில வாரத்தில் 5 சக்தி வாய்ந்த காயின்கள் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும் அந்த காயினை கைப்பற்றிய போட்டியாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக நாமினேஷனில் இருந்து அவர்கள் தங்களை காப்பாற்றிக் கொள்ளலாம் என்றும் அதே போல் கேப்டன் தேர்வு நடைபெறும் போதும் தேர்வான போட்டியாளரை நீக்கிவிட்டு தன்னையே கேப்டனாக பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த காயினை அனைத்து போட்டியாளர்களும் மாறி மாறி பயன்படுத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது இந்த வார நாமினேஷன் செய்யப்பட்டவர்கள் யார் யார் என அறிவிக்கப்பட்டது. அதில் அபினய், இமான், அக்ஷரா, நிரூப் மற்றும் சிபி ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

அப்போது பிக்பாஸ் நிரூப்பிடம், நாமினேஷனில் இருந்து நீங்கள் உங்களை காப்பாற்றிக் கொள்ள காயினை பயன்படுத்த விரும்புகிறீர்களா? என கேட்க அதற்கு ஆம் என்று கூறிய நிரூப், தன்னை காப்பாற்றிக் கொண்டு தனக்கு பதிலாக சஞ்சீவ்வை நாமினேஷன் செய்வதாக கூறினார்.

இதனை அடுத்து பிக்பாஸ் வைத்த ட்விஸ்ட் என்னவெனில் நிரூப்புக்கும் சஞ்சீவ்க்கும் இடையே ஒரு போட்டி நடக்கும் என்றும் அந்த போட்டியில் நிரூப் வென்றால் மட்டுமே அவர் நாமினேஷனில் இருந்து தப்பிக்க முடியும் என்றும் கூறினார். அந்த போட்டி நடைபெறும் நிலையில் அந்த போட்டியில் நிரூப் வெற்றி பெற்று தன்னை காப்பாற்றி கொண்டாரா? அல்லது சஞ்சீவ் வெற்றி பெற்று நாமினேஷனில் இருந்து தப்பித்துக் கொண்டாரா? என்பதை இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்.

Trending

Exit mobile version