சினிமா செய்திகள்

ரூ.3 லட்சம் ரூபாய் பணப்பெட்டியை எடுப்பது இந்த போட்டியாளரா?

Published

on

பிக்பாஸ் நிகழ்ச்சி அடுத்த வாரம் முடிவடைய உள்ள நிலையில் தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பதும் இந்த வாரம் இரண்டு போட்டியாளர்கள் வெளியேற்றப்படுவார்கள் என்றும் அது மட்டுமின்றி பணப் பெட்டியை எடுத்துக் கொண்டு ஒரு போட்டியாளர் வெளியேறி விட்டால் அடுத்த வாரம் நான்கு போட்டியாளர்கள் இறுதிப்போட்டிக்கு செல்வதற்கு சரியாக இருக்கும் என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் சரத்குமார் இன்று ரூபாய் 3 லட்சம் ரூபாய் பெட்டியுடன் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தார் என்பதும் இந்த பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே செல்லும் போட்டியாளர்கள் தாராளமாகச் செல்லலாம் என்று அறிவித்து இருந்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இன்று வெளியான அடுத்த புரோமோ வீடியோவில் நான் அந்த பெட்டியை எடுத்தாலும் எடுத்து விடுவேன் என்று சொல்வதிலிருந்து நிரூப் அந்தப் பெட்டியை எடுத்துக்கொண்டு சென்று விடுவாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது.

ஏற்கனவே இந்த போட்டியில் ஜெயிக்க மாட்டோம் என்பதை நிரூப் ஏற்கனவே முடிவு செய்து விட்டார். அதுமட்டுமின்றி இறுதிப்போட்டியில் பிரியங்கா அல்லது ராஜூ ஆகிய இருவரில் ஒருவர் தான் வருவார் என்று நேற்றைய நிகழ்ச்சியிலும் அவர் கூறுவதை பார்க்கும் போது அவர் தான் இறுதிப்போட்டிக்கு செல்வோம் என்றும் என்ற நம்பிக்கை இழந்து விட்டார் என்றும் அப்படியே சென்றாலும் கண்டிப்பாக டைட்டில் வின் பண்ண மாட்டோம் என்பது அவருக்குத் தெரிந்துவிட்டது என்றும் குறிப்பிடத்தக்கது.

எனவே நிரூப் 3 லட்ச ரூபாயை பெட்டியை எடுத்துக் கொண்டு செல்வதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் ஏழ்மை நிலையில் இருந்து வந்த தாமரைக்கு மூன்று லட்ச ரூபாய் என்பது மிகப்பெரிய தொகை என்றாலும் அவர் அந்த பெட்டியை எடுக்க இதுவரை ஆர்வம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Trending

Exit mobile version