தமிழ்நாடு

கடுமையான உழைப்பின் முதல்கட்ட பலன்: நிர்மலா சீதாராமன் வாழ்த்து

Published

on

கடுமையான உழைப்பிற்கு கிடைத்த பலன் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியபோது அண்ணாமலை மற்றும் காட்சி சொந்தங்கள் அனைவரும் கடுமையான உழைப்புக்கு கிடைத்த முதல் கட்ட பலன் தான் இந்த தேர்தலின் முடிவில் காண முடிகிறது என்றும் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றும் தெரிவித்துள்ளார் .

நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மட்டும் ஆளும் கட்சியான திமுக 46 சதவீத வாக்குகளை பெற்று இருக்கும் நிலையில் பாஜக 30 சதவீத வாக்குகளையும் அதிமுகவை 15 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது .

அதேபோல் தமிழகம் முழுவதும் பேரூராட்சிகளில் 132 வார்டுகளிலும் நகராட்சிகளில் 51 வார்டுகளிலும் மாநகராட்சிகளில் பதினோரு வார்டுகளிலும் பாஜக வெற்றி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version