தமிழ்நாடு
நிர்மலா தேவிக்கு பேய் பிடித்திருக்கிறதா? தர்காவில் தலைவிரித்து ஆட்டம்!
கல்லூரி மாணவிகளை தவறான வழிக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் நேற்று கண்களை மூடி தியானம் செய்தது ஊடகங்களில் வெளியானது. ஆனால் நேற்று அவர் நடத்திய பல கூத்துக்குள் தற்போது தான் தெரியவந்துள்ளது.
கண்களை மூடி தியானிப்பது போல இருந்த நிர்மலா தேவி, காமாட்சி அம்மன் தனக்குள் இருப்பதாக கூறினார். மேலும் தன்னை மாட்டிவிட்ட அந்த கல்லூரி மாணவிகள் இறந்துவிட்டதாக பொய் கூறினார். தொடர்ந்து ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவர் போல நடந்துகொண்டார். பின்னர் வழக்கறிஞர் ஒருவர் உன் கணவரிடம் பேசு என மொபைல்லை கொடுத்துள்ளனர். ஆனால் அவரை அதனை ஓங்கி தரையில் அடிக்க மொபைல் டெம்பர் கிளாஸ் சேதாரம் ஆகியுள்ளது.
இதனையடுத்து அதனை சரிசெய்ய சென்ற மொபைல் கடையிலும் நிர்மலா தேவி தியானம் செய்ய ஆரம்பிக்க அவரை அங்கிருந்து கிளப்ப படாதபாடு பட்டுவிட்டார் அந்த கடைக்காரர். தலை நிறைய பூ வைத்துக்கொண்டு சாலையில் அங்கும் இங்குமாக நடந்து, காகிதங்களை பொறுக்கிக்கொண்டு அவர் செய்த செயல்கள் பீதியை கிளப்பும் விதமாக இருந்தது.
இத்தோடு முடித்துக்கொள்ளாமல் இரவு 9 மணியளவில், அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு தர்காவுக்குச் சென்று, தனக்கு பேய் பிடித்திருப்பதாகக் கூறி தலைவிரி கோலமாகத் தலையைச் சுழற்றியபடியே முட்டிக்கொண்டிருந்துள்ளார். நிர்மலா தேவியின் இந்த சேட்டைகள் காவல்துறைக்கு தகவல் செல்ல, இருண்டு பெண் போலீசார் வந்து நிர்மலா தேவியை இழுத்துச்சென்றனர்.