தமிழ்நாடு
நிர்மலா தேவி வழக்கு.. விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஹைகோர்ட் கிளை உத்தரவு!
சென்னை: நிர்மலா தேவி விசாரணை குறித்து சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்திருந்த விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்திற்கு மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அருப்புக்கோட்டையில் தேவாங்கர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணிதத் துறை பேராசிரியராக இருந்தவர் நிர்மலா தேவி. இவர் தனது கல்லூரி மாணவிகளை மதுரை காமராஜர் பல்கலைக்கழக அதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்துள்ளார்.
இது குறித்து ஆடியோ ஆதாரத்தின் அடிப்படையிலும் மாணவிகளின் புகாரின் பேரிலும் அருப்புக் கோட்டை போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வழக்கை சிபிசிஐடி போலீஸார் இரண்டு மாதத்திற்கும் மேலாக விசாரணை நடத்தினார்கள். இந்நிலையில் இந்த ஆடியோ விவகாரம் குறித்து விசாரணை குறித்து இடையில் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பத்திரிக்கையை தொடர்ந்து நிர்மலா தேவியிடம் வாக்குமூலம் வாங்கப்பட்டது. அதன்பின் விசாரணை அறிக்கை ரீவில்லிபுத்துர் மகளிர் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டது.