Connect with us

இந்தியா

நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டது: கேரளா செல்லும் அதிகாரிகள் குழு!

Published

on

அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த வருடம் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதில் 17 பேர் உயிர்ழந்தனர். இந்நிலையில் மீண்டும் அங்கு நிபா வைரஸ் காய்ச்சல் பரவியுள்ளதாக மக்களிடையே கடும் அச்சம் நிலவி வந்தநிலையில் நிபா வைரஸ் பரவியுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள தனியார் மருத்துவமை ஒன்றில் இளைஞர் ஒருவர் நிபா வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டார். இதனை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் உறுதி செய்தார். இருந்தாலும் சோதனை முடிவுகள் வெளியான பின்னரே உறுதியாக சொல்ல முடியும் என்றார்கள். மேலும் கேரள மாநிலம் திரிச்சூரில் 8 பேர் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கும் நிபா வைரஸ் அறிகுறி இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதனால் மக்களிடையே பதற்றம் நிலவி வருந்தது. கேரள அரசு உடனடியாக நிபா வைரஸை கட்டுப்படுத்த தீவிர ஆலோசனையில் இறங்கியது. மருந்துகளும், மருத்துவரகளும் தயார் நிலையில் உள்ளனர். நிபா வைரஸ் குறித்த சூழ்நிலையை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம், யாரும் பயப்பட வேண்டாம், முன்னெச்சரிக்கையாக இருங்கள், சூழ்நிலையை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்கிறது என கேரள முதல்வர்பினராயி விஜயன் கூறியுள்ளார். நிபா வைரஸ் அணில் மற்றும் வௌவால் மூலம் பரவும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புனே தேசிய வைராலஜி ஆய்வுக்கூடத்தில் நடத்தப்பட்ட அந்த நோயாளியின் இரத்த மாதிரி சோதனையின் முடிவில், அவருக்கு நிபா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவருடன் தங்கியிருந்த சிலருக்கும் நிபா வைரஸ் பரவியிருக்கலாம் என்ற அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் தாக்கியுள்ள அந்த நபர் தொடர்புடைய 86 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். அந்த நபருக்குச் சிகிச்சை அளித்த 2 செவிலியர் உட்பட 4 பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், அவர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், கேரள மக்கள் பீதியடைய வேண்டாம், அறிவியல் முறையில் எல்லா தேவைகளும் செய்யப்பட்டு வருகிறது, மத்திய அரசு விரைவில் கேரளாவுக்குத் தேவையான மருந்துகளை வழங்கும். இந்த காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசியானது கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது. அது தற்போது, புனேயில் உள்ள நேஷனல் இன்ஸ்டியூட் ஆஃப் வைரலாஜியில் உள்ளது.

தேசிய சுகாதாரத் துறை அமைச்சகம், கால்நடை பராமரிப்புத் துறை, தேசிய நோய் தடுப்பு மையம், ஏஐஐஎம்எஸ், சப்தர்ஜங் மருத்துவமனை, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சில் ஆகியவற்றைச் சேர்ந்த 6 பேர் கொண்ட அதிகாரிகள் குழு மத்திய அரசின் சார்பில் கேரளாவுக்குச் செல்லவுள்ளது.

author avatar
seithichurul
தினபலன்13 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்24 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்1 நாள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்1 நாள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்1 நாள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்1 நாள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்1 நாள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்1 நாள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்1 நாள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு1 நாள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்3 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!