தமிழ்நாடு

ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கா? முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

Published

on

தமிழகத்தில் ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்த வாய்ப்பு இருப்பதாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியதை அடுத்து தமிழகத்தில் மொத்தம் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று பரவியுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 26 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று பரவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒமிக்ரான் வைரஸை கட்டுப்படுத்தவும், கொரோனா வைரஸை கட்டுப்படுத்தவும் கூடுதல் நடவடிக்கை எடுப்பது குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் இன்று மருத்துவத்துறை மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை செய்யவுள்ளார்.

இந்த ஆலோசனையில் கிறிஸ்மஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் என அடுத்தடுத்து பண்டிகை தினங்கள் வருவதால் ஒமிக்ரான் தொற்று பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31 வரை நீடிக்கப்பட்டு உள்ள நிலையில் ஜனவரி 1 முதல் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்துவது குறித்து ஆலோசனை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே மத்திய அரசு இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தலாம் என மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்னும் ஓரிரு நாளில் தமிழக முதல்வரிடம் இருந்து விரிவான அறிக்கை வெளிவரும் என்றும் அதில் இரவு நேர ஊரடங்கு மற்றும் கூடுதல் கட்டுப்பாடு விதிப்பது குறித்த தகவல்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version