இந்தியா

அதிகரிக்கும் கொரோனா: மேலும் ஒரு மாநிலத்தில் இரவுநேர ஊரடங்கு!

Published

on

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மிக வேகமாக பரவி வருகிறது என்பதும் கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற செய்தியையும் ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வருவதால் மகாராஷ்டிரா உள்ளிட்ட ஒருசில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு மாநிலமான ராஜஸ்தான் மாநிலத்திலும் நாளை முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அனைத்து நகரங்களிலும் நாளை முதல் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், இரவு நேர ஊரடங்கின்போது யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது சந்தைகள், வணிக வளாகங்கள் மாலை 5 மணிக்கு மூடப்பட வேண்டும் என்றும் பொதுமக்கள் 6 மணிக்குள் வீடுபோய் சேர்ந்து சேர வேண்டும் என்றும் அரசு அலுவலகங்கள் உள்பட அனைத்து அலுவலகங்களும் 4 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் மருந்து நிறுவனங்கள் மட்டும் திறந்து வைக்க அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும் திரையரங்குகள் நீச்சல் குளங்கள் ஆகியவை முற்றிலும் மூடப்பட வேண்டும் என்றும் உணவகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதி என்றும் பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளை மட்டுமே பயன்படுத்த அனுமதி என்றும் ராஜஸ்தான் மாநில அரசு தெரிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version