இந்தியா

குஜராத்தில் 4 நகரங்களில் இரவு நேர ஊரடங்கு: அதிர்ச்சியில் பொதுமக்கள்

Published

on

இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது குஜராத் மாநிலத்திலும் கொரோனா வைரஸ் பரவி வருவதன் காரணமாக அங்கு இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நான்கு முக்கிய நகரங்களான அகமதாபாத், சூரத், வதோதரா, ராஜ்கோட் ஆகிய நகரங்களில் நாளை முதல் மார்ச் 31ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குஜராத் மாநில அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதே ரீதியில் சென்றால் இந்தியாவின் பல மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வாய்ப்பிருப்பதால் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version