தமிழ்நாடு

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த 6 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பா? அதிர்ச்சி தகவல்!

Published

on

நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கிறதா என்பதை சோதனை செய்ய உத்தரவிட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் தோன்றிய ஒமிக்ரான் வைரஸ் படிப்படியாக அடுத்தடுத்த நாடுகளுக்கு பரவி வருகிறது என்பதும் இந்தியாவிலும் நாற்பத்தி நான்கு பேருக்கு இதுவரை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உள்ளது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் ஒன்று தமிழகத்தில் இதுவரை ஒமிக்ரான் நுழைய வில்லை என்றாலும் தமிழகத்திலும் ஒமிக்ரான் வைரஸ் பாதிக்கப்படாமல் இருக்க கூடுதல் நடவடிக்கைகளை தமிழக அரசு மற்றும் தமிழக அரசின் சுகாதாரத் துறை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நைஜீரியாவில் இருந்து சென்னை வந்த ஆறு பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு இருக்கின்றதா என்று பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த பரிசோதனை முடிவுகள் இன்று அல்லது நாளை தெரியவரும் என்றும் அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமிழகத்தில் இதுவரை ஒருவர் கூட ஒமிக்ரான் வைரஸால் பாதிக்கப்பட்டவர் இல்லை என சமீபத்தில் அமைச்சர் மா சுப்பிரமணியன் அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version