கிரிக்கெட்
ஐபிஎல் போட்டியில் இருந்து சாம் கர்ரன் திடீர் விலகல்: என்ன காரணம்?
ஐபிஎல் தொடர் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிறப்பாக விளையாடி வருகிறது என்பதும் அதற்கு அனைத்து வீரர்களும் காரணம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன் திடீரென அணியில் இருந்து விலகி இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுட்டிகுழந்தை என்று கூறப்படும் சாம் கர்ரன், காயம் காரணமாக மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் இருந்து விலகுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த தொடரில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகி உள்ளது.
அது மட்டுமின்றி காயம் காரணமாக அவர் விரைவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை போட்டியில் இருந்து இங்கிலாந்து அணியில் இருந்து விலகி உள்ளதாக தெரிகிறது. இதனால் இங்கிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சாம் கர்ரன் விரைவில் காயத்திலிருந்து குணமடைந்து மீண்டும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.