தமிழ்நாடு

அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி திடீர் மாற்றம்!

Published

on

அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் தொடங்கும் தேதி திடீரென மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஜூன் 13ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் வகுப்புகள் தொடங்காது என்றும் அடுத்த கல்வியாண்டுக்கான வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மே 14ம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி விடுமுறை நாளாக அறிவிக்கப்படுகிறது என்றும் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை 2022 – 23ஆம் புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் துவங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் 13-ஆம் தேதி இல்லாமல் வேறு தேதியில் பள்ளிகள் திறக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

 

seithichurul

Trending

Exit mobile version