தமிழ்நாடு

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

Published

on

தமிழகத்தில் 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் மழை நிலவரம் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் கிழக்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும்.

பிப்ரவரி 20,21, 22 ஆகிய தேதிகளில் தென்காசி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், கோவை, நீலகிரி மற்றும் தென் தமிழக மாவட்டங்களிலிருந்தும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்யும் .

பிப்ரவரி 23ஆம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்களில் மட்டும் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றாலும் மழைக்கு வாய்ப்பு இல்லை. ஆனால் அதே நேரத்தில் காலை மாலை ஆகிய வேளைகளில் லேசான பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 

Trending

Exit mobile version