தமிழ்நாடு

பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்: தஞ்சையில் பெரும் பரபரப்பு

Published

on

தஞ்சையில் பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை நடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில வருடங்களாகவே பிறந்த குழந்தைகள் கடத்தப்படுவது அதிகரித்து வருகிறது என்பதும், இதுகுறித்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் தான் முன் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் அறிவித்து வருகின்றனர்.

இந்தநிலையில் தஞ்சையை சேர்ந்த குணசேகரன் மற்றும் ராஜலட்சுமி தம்பதிக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. தஞ்சை அரசு மருத்துவமனையில் பெண்கள் வார்டில் குழந்தை பிறந்த நிலையில் அந்த பகுதியில் ஆண்களுக்கு அனுமதி இல்லை என்பதால் குணசேகரன் இரவு வெளியே சென்றுள்ளார்.

இன்று அதிகாலை 45 வயது மதிக்கத்தக்க பெண்மணி ஒருவர் ராஜலட்சுமியை குளித்துவிட்டு வருமாறு அனுப்பி விட்டு குழந்தையை கட்டைப்பையில் வைத்து கடத்தியதாக தெரிகிறது.

கடந்த இரண்டு நாட்களாகவே அந்த பெண்மணி ராஜலட்சுமி உடன் பேச்சு கொடுத்து பழகியதாகவும் அவருடைய விவரங்களை தெரிந்து கொண்டதாகவும் சிசிடிவி காட்சிகளில் இருந்து தெரியவருகிறது.

இதனையடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பச்சிளம் குழந்தையை கடத்திய பெண்மணியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இன்னும் ஒரு சில மணி நேரங்களில் அந்த குழந்தையை கடத்திய பெண்மணி பிடிபடுவார் என்று காவல்துறை வட்டாரங்கள் கூறியுள்ளன. பிறந்து ஒரே ஒரு நாள் மட்டுமே ஆன பச்சிளம் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending

Exit mobile version