கிரிக்கெட்

உலகக் கோப்பை அரையிறுதி: டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங்!

Published

on

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் முதல் அறையிறுதிப்போட்டியில் இந்திய அணி இன்று நியூசிலாந்து அணியை சந்திக்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பதால் எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது.

இந்திய அணியை பொறுத்தவரையில் இந்த தொடரில் அபாரமாக விளையாடி வருகிறது. அனைத்து அணிகளும் இந்திய அணியை பார்த்து பயப்படும் அளவுக்கு இந்திய அணியின் செயல்பாடுகள் உள்ளது. பந்துவீச்சு, பேட்டிங் என இரண்டிலும் இந்திய அணி மிரட்டி வருகிறது. குறிப்பாக இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் ஆக்ரோஷமான பந்துவீச்சை எதிர்கொள்ள எதிரணி வீரர்கள் திணறுகிறார்கள்.

இந்த அரையிறுதிப்போட்டி மான்செஸ்டர் மைதானத்தில் நடக்கிறது. இதில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்த மைதானத்தின் தன்மையை பொறுத்தவரை முதலில் பேட் செய்யும் அணியே வெற்றிபெறும் என்ற கருத்து நிலவி வருகிறது. இந்திய அணியில் ஷமிக்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. புவனேஷ்வர் குமார் களமிறக்கப்பட்டுள்ளார். மேலும் ரிஷப் பண்ட், ரவீந்தர ஜடேஜா ஆகியோருக்கும் இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version