உலகம்
வேகமாக பரவும் புதியவகை வைரஸ்: மறுபடியும் முதல்ல இருந்தா?
உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் பல்வேறு வகைகளில் உருமாறி பரவியது என்பதும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பரவிய ஒமைக்ரான் வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் உலகம் முழுவதும் தற்போது அனைத்து வகை வைரஸ்களும் தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்பதும், அனைத்து நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது .
இந்த நிலையில் திடீரென உலக சுகாதார மையம் அதிர்ச்சி தரும் ஒரு தகவலை தெரிவித்துள்ளது. ஒமைக்ரானை விட பல மடங்கு வேகமாக பரவும் எக்ஸ்.ஈ என்ற புதிய வகை வைரஸ் பரவி வரும் இந்த வைரஸ் முன்னைவிட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.
தற்போது இங்கிலாந்து நாட்டில் இந்த வைரஸ் பரவி வருவதாகவும் உலகம் முழுவதும் இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ள வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது .
கொரோனாவால் ஏற்கனவே பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் எக்ஸ்.ஈ வகை வைரஸ் உள்ளே செல்லும்போது மீண்டும் உருமாற்றம் அடையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள மனித இனத்திற்கே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.