தமிழ்நாடு
தமிழ்நாடு அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள புதிய வாட்ஸ்அப் சேனல் அறிமுகம்!
சென்னை, ஜூன் 11: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, பல்வேறு முக்கிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
பொதுமக்கள் அனைவருக்கும் அரசு திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பயனடைய வழிவகுக்கவும், தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை, ஏற்கனவே Facebook, Instagram, Twitter, YouTube போன்ற சமூக ஊடகங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, “TNDIPR, Govt. of Tamil Nadu” என்ற பெயரில் அதிகாரப்பூர்வ வாட்ஸ்அப் சேனல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த வாட்ஸ்அப் சேனலில் சேர்ந்து, அரசின் திட்டங்கள் மற்றும் செய்திகளைப் பற்றி அறிந்து கொள்ள, மேலே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். தமிழ்நாடு அரசின் திட்டங்களைப் பற்றி அறிந்து, அவற்றின் பயன்களை பெற இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!
தமிழக அரசின் செய்திகள், திட்டங்களை அறிந்துக் கொள்ள வாட்ஸ்-அப் சேனல் தொடங்கி, அதில் இணைந்துக்கொள்ள பொதுமக்களை தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல் 13ம் தேதி துவக்கப்பட்ட இந்த சேனல் தொடர்பாக, இன்று தமிழக அரசு மக்கள் தொடர்புத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. #TNDIPR #TNGovt pic.twitter.com/aYLFgn1Tcj
— Idam valam (@Idam_valam) June 10, 2024