உலகம்
புதிய வைரஸ்க்கு பெயர் வைத்த உலக சுகாதார மையம்: பூஸ்டர் டோஸ் கட்டாயம் என தகவல்!
தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை கொரோனா வைரஸ் கடந்த சில நாட்களாக பரவி வரும் நிலையில் அந்த வைரஸ்க்கு உலக சுகாதார மையம் புதிய பெயரை வைத்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வந்தது என்பதும் அதன் பின்னர் தடுப்பூசி கண்டுபிடித்த பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியா உட்பட பல நாடுகளில் படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் இயல்பு நிலை திரும்பி விட்டது என்பதும் விமான போக்குவரத்து உள்பட அனைத்து போக்குவரத்துகளும் தற்போது இயல்பாக நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திடீர் அதிர்ச்சிகரமான செய்தியாக தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஒருசில நாடுகளில் புதிய வகை வைரஸ் பரவி வருவதாகவும் இந்த வகை கொரோனா இதுவரை கண்டுபிடிக்க வகைகளிலேயே மிகவும் மோசமானது என்றும் மனித இனத்தையே அழித்து விடும் அளவுக்கு இந்த வைரஸ் மிகவும் வீரியமானது என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த புதிய வகை வைரஸ்க்கு ‘ஒமிக்ரான்’ என்ற பெயரை உலக சுகாதார மையம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வைரஸில் இருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென்றும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தினாலும் இந்த வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதால் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றும் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு புதிய வகை வைரஸ் தாக்கவில்லை என்ற ஆய்வு முடிவும் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உலகம் முழுவதும் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டுமென்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.