கிரிக்கெட்

கங்குலியின் உடல்நிலை குறித்து புதிய தகவல்!

Published

on

பிசிசிஐ சேர்மன் கங்குலி அவர்கள் மாரடைப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் கிரிக்கெட் வீரரான கங்குலி, 2019 முதல் பிசிசிஐ சேர்மனாக பதவி வகித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு நெஞ்சு வலியால் அவதிப்பட்ட கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், கங்குலியின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர், அதில், இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு ஏற்பட்டதன் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது எனவும், ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டுள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் மருத்துவர்கள் கூறுகையில் கங்குலியின் ரத்தஅழுத்தம், சர்க்கரை அளவு ஆகிவை சரியாக உள்ளது என்றும்  அடுத்ததாக எந்த மாதிரியான சிகிச்சை செய்யவேண்டும் என்பது குறித்து  மருத்துவ உயர் குழு ஆலோசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கங்குலியின் உடல்நிலை குறித்து பிரதமர் மோடி தொலைபேசி மூலமாக விசாரித்தார்.

seithichurul

Trending

Exit mobile version