இந்தியா

கொரோனாவின் அடுத்த வகை ‘டெல்டாக்ரான்’ – புதிய வைரஸ் கண்டுபிடிப்பு

Published

on

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு,கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டனர். லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனை அடுத்து உலகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.இதனால், கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்தது.a இதனால் ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

ஆனால், தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற புதிய வைரஸ் தோன்றியது. மேலும்,. இந்தியா உள்பட 90 நாட்களுக்கு மேல் ஒமிக்ரான் வைரஸ் பரவி இருப்பதால் அதனை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகளின் சுகாதார துறை தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் வேமகாக பரவி வருகிறது. இந்தியாவில் சுமார் 3500க்கும் மேற்பட்டோர் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒருபக்கம் கொரோனா 3வது அலையும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் நேற்று ஒரு நாளில் ஒன்றரை லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கொரோனாவின் புதிய வகையாக டெல்டாக்ரான் என்கிற வைரஸ் பரவி வருகிறது. சைப்ரஸில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் கொரோனாவின் இந்த வைரஸை கண்டறிந்துள்ளனர். இது மிகவும் கொடிய வகையான டெல்டா மற்றும் தொற்று பரவல் அதிகமாக உள்ள ஓமிக்ரான் ஆகியவற்றின் கலவை என கூறப்படுகிறது.

ஏற்கனவே ‘டெல்மிக்ரான்’ என்ற புதிய வகை வைரஸ் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தற்போது பரவி வருவதாகவும் இந்த வைரஸ் டெல்டா கொரோனா மற்றும் ஒமிக்ரான் ஆகிய வைரஸ்களின் கலவையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. இது எந்த அளவுக்கு மனித இனத்தை பாதிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வுக்குப் பின்னரே இதன் பாதிப்பு குறித்து தெரியவரும் என்றும் கூறப்பட்டது.

அதேபோல், இஸ்ரேலில் ஒரு புதிய வகை வைரஸ் பரவ துவங்கியுள்ளது எனவும், இதற்கு ப்ளோரனா என பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version