Connect with us

இந்தியா

இந்தியாவில் கிடுகிடுவென பரவும் புதுவகை கொரோனா; அதிவேக தொற்றாக மாறும் அபாயம் – எய்ம்ஸ் எச்சரிக்கை

Published

on

new coronavirus strain

இந்தியாவில் கடந்த ஒரு வார காலமாக புதுவகை கொரோனா வைரஸ் தொற்று கிடு கிடுவென பரவி வருகிறது. இந்த புதுவகை தொற்று முன்பை இருந்த கொரோனா தொற்றை விட மிக அதிவேகமாக பரவும் அபாயம் உள்ளது என்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் மருத்துவர் ரந்தீப் குலேரியா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனாவின் புதிய வகை, தற்போது மகாராஷ்டிர மாநிலத்தில் வேகமாக பரவி வருகிறது. கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று, நாட்டில் படிப்படியாக குறைந்து வந்த நிலையில், தற்போது மகாராஷ்டிராவில் அது அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மகாராஷ்டிராவைத் தவிர கேரளா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களிலும் இந்தப் புதிய வகை கொரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

தற்போது கொரோனா தொற்றுக்கு எதிராக நாட்டில் இரு வகைத் தடுப்பூசி மருந்துகள் முன்களப் பணியாளர்களுக்குச் செலுத்தப்பட்டு வருகிறது. நாட்டில் மொத்தம் உள்ள 3 கோடி முன்களப் பணியாளர்களில் சுமார் 1 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என்றும், அடுத்து தடுப்பூசி அதிகம் தேவைப்படும் 27 கோடி பேருக்கு கொடுக்கப்படும் என்றும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, புதிய வகை கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறனுடையதா என்னும் கேள்வியும் எழுந்துள்ளது.

இப்படியான சூழலில் தான் மருத்துவர் குலேரியா, ‘நம் நாட்டில் பொதுவாக கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் திறன் மொத்த மக்கள் தொகைக்கும் வந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. அதில் உண்மையில்லை. புதுவகை கொரோனா மிகவும் அபாயகரமானது மற்றும் அதிகமாக பரவக்கூடியது. இதற்கு முன்னால் கொரோனா தொற்றால் அவதிப்பட்டவர்களுக்கும் இந்த புதுவகை கொரோனா மீண்டும் பாதிப்பை ஏற்படுத்தலாம்’ என்கிறார்.

புதுவகைத் தொற்றால், மீண்டும் நாட்டில் அதிக பரிசோதனைகள், பாதிப்பு இருப்பரைத் தனிமைப்படுத்துதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் போன்ற நடவடிக்கைகளில் அரசுகள் துரிதப்படுத்த வேண்டி வரலாம் எனப்படுகிறது.

 

தினபலன்2 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு8 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்8 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்24 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்23 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!