Connect with us

தமிழ்நாடு

கோவையில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

Published

on

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் படிப்படியாக கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வந்தாலும் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கேரளாவை ஒட்டி உள்ள மாவட்டங்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கோவை மாவட்டத்தில் தினசரி 200 க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் அம்மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடு விதிக்கப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து நகை கடைகள் மற்றும் துணிக்கடைகள் சனி, ஞாயிறு கிழமைகளில் இயங்க தடை என்றும், அனைத்து பூங்காக்களிலும் சனி, ஞாயிறு கிழமைகளில் பொதுமக்கள் வருகைக்கு தடை என்றும், அனைத்து மால்களும் சனி ஞாயிறு அன்று மூடவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அத்தியாவசியமான கடைகள் தவிர மற்ற கடைகள் இரவு 10 மணிக்குள் மூடவேண்டும் என்றும், இரவு 8 மணி அளவில் இருந்தே வாடிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் 6 மணி வரை மட்டுமே 50 சதவீத வாடிக்கையாளர்கள் இயங்க அனுமதி என்றும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை பார்சலுக்கு அனுமதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவீத கடைகள் உடன் இயங்க அனுமதி என்றும், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து சந்தைகளும் இயங்க தடை விதிக்கப்படுவதாக குறிப்பாக பொள்ளாச்சி மாட்டு சந்தைக்கு தற்காலிகமாக இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருமண மண்டபங்களில் நடைபெற உள்ள திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சி விவரங்களை முன்கூட்டியே வட்டாட்சியரிடம் தெரிவித்து அனுமதி பெறவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் மட்டும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் கோவை மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

author avatar
seithichurul
தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய (27/09/2024) ராசிபலன்

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

சாதம் சாப்பிட்டாலும் உடல் எடையை குறைக்கலாம்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

செவ்வாழை: தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதன் நன்மைகள்!

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

நவராத்திரி 2024: தேதிகள், சிறப்புகள் மற்றும் விவரங்கள்!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

காடை வாங்கினா இப்படி ஒருமுறை வறுவல் செஞ்சு பாருங்க… சுவையாக இருக்கும்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ஜியோவின் தீபாவளி தமாகா: ஒரு வருட இலவச இணையம், ஆனாலும் ஒரு நிபந்தனை!

ஆரோக்கியம்18 மணி நேரங்கள் ago

வெண்டைக்காய் நல்லது, ஆனாலும் இவர்கள் மட்டும் சாப்பிடக்கூடாது!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

முள்ளங்கியுடன் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகள் – எச்சரிக்கையுடன் இருங்கள்!

செய்திகள்19 மணி நேரங்கள் ago

தேசிய குடும்ப தினம்: குடும்ப உறவுகளை கொண்டாடும் சிறப்புநாள்!

வேலைவாய்ப்பு21 மணி நேரங்கள் ago

ரூ.34,000/- ஊதியத்தில் தமிழக அரசில் தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.15 லட்சம் சம்பளத்தில் டிஜிட்டல் இந்தியா கார்ப்பரேஷனில் வேலைவாய்ப்பு!

சினிமா5 நாட்கள் ago

OTT-யில் அதிரவைக்கும் சைக்கோ திரில்லர்: உண்மை சம்பவத்தை தழுவி வந்த Sector 36!

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்5 நாட்கள் ago

செப்டம்பர் 23 முதல் செப்டம்பர் 29 வரையிலான வார ராசிபலன்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

ஒரு வயது வரை குழந்தைகளுக்கு இந்த உணவுகள் வேண்டாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

IT துறையில் வேலை தேடுபவரா நீங்கள்? Accenture நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

படிகாரம்: ஆரோக்கியத்திற்கும் அற்புதமாய் பயன்படும்!

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசி பலன்
தினபலன்5 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் (22-09-2024)

இந்தியா2 நாட்கள் ago

ரூ. 10,000 முதலீடு செய்தால் ரூ. 31 லட்சம் கிடைக்கும்…! அசத்தலான POST OFFICE திட்டம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் HPCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

வணிகம்2 நாட்கள் ago

ஏர்டெல்-ன் மூன்று புதிய பிரீபெய்ட் திட்டங்கள் அறிமுகம்!