Connect with us

தமிழ்நாடு

கோவையில் நாளை முதல் மீண்டும் கட்டுப்பாடுகள்: கிட்டத்தட்ட முழுஊரடங்கு!

Published

on

கொரோனா வைரஸ் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க வேண்டுமென 10 மாநிலங்களுக்கு மத்திய அரசு நேற்று அறிவுறுத்தியுள்ளதை அடுத்து தமிழகத்தில் உள்ள கோவையில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, பால், மருந்த கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை மட்டுமே கோவையில் செயல்படும் என்றும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட முக்கிய தெருக்களில் உள்ள கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை செயல்பட தடை விதிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோவையில் உள்ள உணவகங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே இயங்க வேண்டும் என்றும் காய்கறி மார்க்கெட்டில் மொத்த வியாபாரத்திற்கு மட்டுமே அனுமதி என்றும் சிலர் சில்லரை வியாபாரத்திற்கு அனுமதி இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவையில் உள்ள முக்கிய கோவில்கள் அனைத்திலும் பக்தர்கள் வருவதற்கு தடை விதிக்கப்படுவதாக ஆகம பூஜைகள் மட்டும் நடைபெறும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோல் கோவை மாவட்டத்திற்குள் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் மற்றும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இல்லையெனில் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுவரை கோவை எல்லைக்குள் பிற மாநிலத்தில் இருந்து வருபவர்கள் வருபவர்கள் இபதிவு செய்திருந்தால் போதும் என்று மட்டும் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதனால் கோவையில் கிட்டத்தட்ட முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருப்பதாக பொதுமக்கள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

author avatar
seithichurul
ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

பிளம்ஸ்: இயற்கையின் இனிப்பு மருந்து!

ஆரோக்கியம்6 மணி நேரங்கள் ago

பல் பொடி vs பற்பசை: எது சிறந்தது?

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.2,40,000/- ஊதியத்தில் ESIC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

இந்தியா6 மணி நேரங்கள் ago

கர்நாடகா அரசின் SBI, PNB வங்கி கணக்குகள் மூடல் உத்தரவு: தற்காலிக நிறுத்தம்!

ஆன்மீகம்6 மணி நேரங்கள் ago

ஆவணி அவிட்டம் 2024: பூணூல் மாற்ற உகந்த நேரம் மற்றும் முக்கியத்துவம்!

வேலைவாய்ப்பு7 மணி நேரங்கள் ago

NLC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!

உலகம்7 மணி நேரங்கள் ago

H-1B விசா: இந்த ஆண்டும் இரண்டாம் சுற்று குலுக்கல்

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் பொழியும்!

ஆரோக்கியம்7 மணி நேரங்கள் ago

தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்பதற்கான 9 காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

அம்பானி குடும்பத்தினர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் பெறும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

வணிகம்5 நாட்கள் ago

ஒரு ஆண்டில் 42,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்த ரிலையன்ஸ்!

வணிகம்4 நாட்கள் ago

இன்று தங்கம் விலை உயர்வு!(12-08-2024)

சினிமா2 நாட்கள் ago

டிமாண்டி காலனி 2 விமர்சனங்கள்: ரசிகர்கள் சொல்லும் கருத்துக்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY)- நகர்ப்புறம் 2.0-க்கு அமைச்சரவை ஒப்புதல்: தகுதி என்ன? மானியம் எவ்வளவு? முழுவிவரம்

சினிமா2 நாட்கள் ago

தங்கலான் திரைப்படம்: விமர்சனம், ரேட்டிங், ரிலீஸ் விவரங்கள்!

வணிகம்2 நாட்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் குறையும் தங்கம் விலை (14/08/2024)!

வணிகம்3 நாட்கள் ago

அதிரடியாக தங்கம் விலை உயர்வு.. சவரன் எவ்வளவு?(13-08-2024)

பர்சனல் ஃபினான்ஸ்7 நாட்கள் ago

ஓய்வு காலத்தில் நிலையான மாத வருமானம் வழங்கும் 5 சிறந்த திட்டங்கள்!

வணிகம்6 நாட்கள் ago

செபி தலைவர் மீதான ஹிண்டன்பர்க் குற்றச்சாட்டு: அதிர்ச்சியளிக்கும் புகார்

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் வாங்குவது நல்லதா? தங்கம் மியூச்சுவல் ஃபண்ட் வாங்குவது நல்லதா?