தமிழ்நாடு

உருமாறிய கொரோனா – சென்னையில் மேலும் 3 பேருக்கு உறுதியானது

Published

on

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் புதியவகை உருமாறிய கொரோனா அதிக அளவில் பரவி வருகின்றது. இந்நிலையில் நவம்பர் 25 முதல் டிசம்பர் 25 வரை பிரிட்டனில் இருந்து சென்னை வந்த பயணிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது அதில் 12 பேரின் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவந்துள்ளது. பரிசோதனை செய்யப்பட்ட மொத்தம் 12 பேரில் 3 பேருக்கு உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோயாளிகள் அனைவரும் நலமாக இருப்பதாகவும் போதிய சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் சுகாதாரதுறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். தமிழகம் மட்டுமின்றி கேரளாவிலும் உருமாறிய கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் 2 வயது குழந்தை உட்பட 6 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் மாஸ்க் அணியாமல் எங்கும் செல்ல வேண்டாம் எனவும் கைகளை அடிக்கடி கழுவ வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version