இந்தியா

ஜனாதிபதி மாளிகையில் பதவியேற்கும் புதிய மத்திய அமைச்சர்கள்!

Published

on

மத்திய அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்படுவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பாக புதிதாக பதவி ஏற்க இருக்கும் 43 அமைச்சர்களின் பட்டியல் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதில் தமிழகத்தைச் சேர்ந்த எல் முருகன் அவர்களும் மத்திய அமைச்சர் ஆகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று வருகின்றனர். தற்போது பதவி ஏற்பு விழா நடைபெற்று வருகிறது என்பதும் 43 மத்திய அமைச்சர்களுக்கும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற்று வருகிறது என்பதும் இந்த பதவியேற்பு விழாவில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மத்திய அமைச்சர்களாக முன்னாள் மகாராஷ்டிர மாநில முதல்வர் நாராயண், முன்னாள் அசாம் முதல்வர் சர்பானந்தா சோனாவால், உள்பட பலர் ஏற்கனவே பதவியேற்றுள்ளனர். வீரேந்திர குமார், ஜோதிராதித்யா சிந்தியா, ராமசந்திர பிரசாத் சிங் ஆகியோர்களும் பதவியேற்றுவிட்டனர். தற்போது அடுத்தடுத்து ஒவ்வொருவராக பதவியேற்று வருகிறார்கள் என்பதும் அவர்கள் அனைவருக்கும் ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இன்று அல்லது நாளை புதிய அமைச்சர்களின் இலாகா குறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

seithichurul

Trending

Exit mobile version