தமிழ்நாடு

தமிழ்நாட்டுக்கென தனி கல்விக் கொள்கை: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

Published

on

தமிழ்நாட்டுக்கு என தனி கல்வி கொள்கை வகுக்கப்படும் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் .

நாடு முழுவதிலும் புதிய கல்விக் கொள்கை அமல் பட்டுள்ளது என்பதும் இருப்பினும் ஒரு சில மாநிலங்கள் இன்னும் இந்த புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன .

குறிப்பாக தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து ஆளும் திமுக அரசு புதிய கல்விக் கொள்கையை பின்பற்றவில்லை என்பது குறிப்ப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு என தனி கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் மாநில கல்வி கொள்கையை உருவாக்குவதற்கு புதிய குழு அமைக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் குறித்துள்ளார்.

மத்திய அரசு அமல்படுத்தி உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு என தனியே கல்விக் கொள்கை உருவாக்கப்படும் என அமைச்சரின் தகவல் மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Trending

Exit mobile version