தமிழ்நாடு
புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவியேற்பு: காவல்துறையினர்களுக்கு முக்கிய கோரிக்கை!
![Sailendra Babu IPS - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/06/Sailendra-Babu-IPS.jpg)
புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சக காவல்துறை அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழக டிஜிபியாக இருந்த திரிபாதி ஓய்வு பெற்றதை அடுத்து தமிழக காவல்துறையின் 30வது சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு சற்றுமுன் பதவி ஏற்றுக் கொண்டார். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் புதிய டிஜிபியாக சைலேந்திரபாபு பதவி ஏற்றுக் கொண்டபின் காவல் துறையினர் மத்தியில் பேசியபோது ’தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை பேணிக்காக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்று கூறினார். மேலும் தமிழக போலீசார் பொதுமக்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். மேலும் தனக்கு டிஜிபி பொறுப்பு வழங்கிய தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.
புதிய டிஜிபியாக பதவி ஏற்றுக்கொண்ட சைலேந்திரபாபு அவர்களிடம் ஓய்வு பெற்ற டிஜிபி திரிபாதி அவர்கள் பொறுப்புகளை ஒப்படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய டிஜிபியாக பதவியேற்று கொண்ட சைலேந்திரபாபு குறைந்தது இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.