உலகம்

‘கொரோனா தடுப்பூசி’ விலங்குகள் மீதான சோதனை வெற்றி!

Published

on

உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடி வரும் கொரோனா வைரஸ் தக்குதலுக்கு, எதிரான கொரோனா தடுப்பூசியின் மிருகங்கள் மீதான சோதனை வெற்றி அடைந்துள்ளது.

அடுத்ததாக மே மாதம், மனிதர்கள் மீதான சோதனையைச் செய்ய உள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த, மருந்து நிறுவனமான நோவா வாக்ஸ் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நோவா வாக்ஸ் நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி கிரிகோரி கிலென், “கொரோனா தடுப்பூசி விலங்குகளிடம் வெற்றிகரமாகச் சோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் மீது உள்ள முள் போன்ற அமைப்புகள், மனித உடலில் உள்ள செல்களை, கெட்டியாகப் பிடித்துக்கொள்கின்றன.

அந்த முள் போன்ற பசையை மனித செல்களில் இருந்து விடுவிக்க, தாங்கள் தயாரித்துள்ள ஆண்டிபயாடிக் மருந்தால் முடியும்.

இந்த தடுப்பூசி சோதனை முடிய இன்னும் இரண்டு மாதங்கள் வரை ஆகும். மேலும் கொரோனா வைரஸ் இரண்டாம் கட்ட வளர்ச்சியடைந்து தாக்கவும் வாய்ப்புள்ளது. அதற்கேற்றவாறு மருந்துகளைத் தயாரித்து வருவதாகவும்” கிரிகோரி கிலென் தெரிவித்துள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version