இந்தியா

கிடுகிடுவென பரவும் உருமாறிய கொரோனா வகைகள்; 18 மாநிலங்களில் புது கொரோனா இருப்பது உறுதியானது!

Published

on

இந்தியாவில் உள்ள 18 மாநிலங்களில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவியுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவி வருவதாக அஞ்சப்படும் நிலையில் அமைச்சரின் இத்தகவல் அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.

இந்திய அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 47,262 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது இந்த ஆண்டின் மிக அதிகபட்ச ஒரு நாள் பாதிப்பாகும். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்ளின் எண்ணிக்கை 1,17,34,058 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 14 நாட்களாக நாட்டில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதன் மூலம் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை 3,68,457 ஆக உயர்ந்துள்ளது. இதனால் மொத்த பாதிப்பில் ஆக்டிவ் கேஸ்களின் விகிதமானது 3.14 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்களின் விகிதமானது 95.49 ஆக குறைந்துள்ளது.

அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 275 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம் கொரோனா மூலம் ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கை 1,60,441 ஆக அதிகரித்துள்ளது. இது கடந்த 83 நாட்களில் இல்லாத உயர்வு ஆகும்.

வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நாட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version