தமிழ்நாடு

சென்னை மாநகராட்சி ஆணையர் இடமாற்றம்: புதிய கமிஷனர் யார்?

Published

on

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் நடந்ததிலிருந்தே ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். குறிப்பாக தலைமைச் செயலாளர், சென்னை மாநகர கமிஷனர், காவல்துறை டிஜிபி, உளவுத்துறை டிஜிபி உள்பட பல ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரிகள் கடந்த சில நாட்களாக மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது அடுத்த கட்டமாக சென்னை மாநகராட்சி கமிஷனர் மாற்றப்பட்டுள்ளார். இதுவரை சென்னை மாநகராட்சி கமிஷனராக இருந்த பிரகாஷ் என்பவர் கடந்த சில மாதங்களாக கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கையை தீவிரப்படுத்தி வந்தார் என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் புதிய ஆட்சி பதவி ஏற்றதை அடுத்து சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த பிரகாஷ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய சென்னை மாநகராட்சி ஆணையராக சுகன்தீப்சிங் பேடி அவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுவரை வேளாண் துறை செயலாளராக இருந்த சுகன்தீப்சிங் பேடி அவர்கள் தற்போது சென்னை மாநகராட்சி ஆணையராக மாற்றப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
seithichurul

Trending

Exit mobile version