தமிழ்நாடு
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையில் புதிய மாற்றம்!
10-ம் வகுப்பு பொதுத்தேர்வின் அட்டவணையில் புதிய மாற்றங்களைச் செய்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் 2019-2020 கல்வி ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 மார்ச் 17-ம் தேதி தொடங்கி 2020 ஏப்ரல் 9-ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்திருந்தனர்.
தற்போது 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழித்தாள்கள் ஒன்றாகக் குறைக்கப்பட்டுள்ளதால், தேர்வு அட்டவணையிலும் திருத்தம் செய்து பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
புதிய திருத்தத்தின் படி நடப்பு கல்வி ஆண்டுக்கான பொதுத்தேர்வு மார்ச் 27-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை நடைபெறும். பொதுத்தேர்வு முடிவுகள் மே 4-ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிகல்வித்துறை அறிவித்துள்ளது.