டிவி

அட இது என்ன பிக்பாஸ்.. மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தியா.. கமல் ஒப்புக்கொள்வாரா?

Published

on

பிக்பாஸ் சீசன் 4-ன், 9-வது நாளுக்கான இன்றைய ப்ரோமோ வெளியாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்றிய ப்ரோமோவில், பிக்பாஸ் சரித்திரத்தில் முதல் முறையாக மக்களின் வாக்கை மாற்றி அமைக்கும் சக்தி என்ற புதிய முறையை அறிமுகம் செய்துள்ளனர்.

அதில் இந்த வாரம் எவிக்‌ஷனுக்கு நாமிஷன் செய்யப்பட்ட 7 பேரும் ஒரு அறையில் உட்கார வைக்கப்படுகின்றனர். அவர்கள் 7 பேரும் தான் ஏன் இந்த வீட்டில் தொடர வேண்டும், பிறருக்கு ஏன் பிக்பாஸ் வீட்டில் இருக்க தகுதியில்லை என்று விவாதிப்பது போல அமைந்துள்ளது. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு வழங்கப்படும் கார்டை வைத்து எவிக்‌ஷனில் இருந்து தன்னை காப்பாற்றிக்கொள்ள முடியும். மேலும் இந்த கார்டு இந்த சீசன் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது அந்த கார்டை பெறும் போட்டியாளர்கள், தங்களுக்கு எப்போது இது வேண்டுமோ, அப்போது பயன்படுத்திக்கொள்ளலாம். எனவே இன்று காரசார விவாதம், அழுந்துக்கொண்டே வெளியேறுவது போன்ற காட்சிகளைப் பார்க்க முடியும்.

ஆனால் மக்கள் தான் தீர்மானிக்கும் சக்தி என்று சொல்லும் கமல் இதை ஏற்பாரா என்று வார இறுதி வரை பொருத்து இருந்து பார்ப்போம்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version