தமிழ்நாடு
வங்கக்கடலில் புதிய புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!
வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாகியிருப்பதை அடுத்து சென்னை உள்பட தமிழகத்தில் கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு உருவாக இருப்பதாகவும் இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக மத்திய மேற்கு மற்றும் வட மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதி, தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திர பகுதி, தமிழகம் ஆகிய பகுதிகளில் கனமழை பெய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்தம் புயலாக மாறுமா? என்பதும் எந்த திசையை நோக்கி நகரும் என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் தெரியவரும் என்று கூறப்படுகிறது. இந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்றும் அதேபோல் தென்மேற்கு மற்றும் அரபிக் கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் ஜூலை 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் கனமழை பெய்யும் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.