தமிழ்நாடு
அதிமுகவுடன் அமமுக இணைக்கப்படுமா? தினகரன் என்ன சொல்றார் தெரியுமா!
சென்னை: எக்காலத்திலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை, அதிமுகவுடன் இணைக்க மாட்டேன் என்று அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜகவை சேர்ந்த மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, நாடாளுமன்ற தேர்தலில் பாஜக-அதிமுக கூட்டணி அமைவது உறுதி. ஜெயலலிதா கனவுகளை நிறைவேற்ற டிடிவி தினகரன் அதிமுகவுடன் இணைய வேண்டும். அதிமுகவுடன் இணைய வேண்டும் என தினகரனை சந்தித்து வலியுறுத்த உள்ளேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் ராம்தாஸ் அத்வாலே கருத்து குறித்து தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், நாங்கள் எப்போதும் அதிமுகவுடன் சேர மாட்டோம். அதிமுக ஒரு துரோக கட்சி.
அந்த கட்சியுடன் நாங்கள் ஏன் அமமுகவை இணைக்க வேண்டும். ஜெயலலிதாவின் பெயரை சொல்லி மக்களை ஏமாற்றி வருகிறது அதிமுக அரசு. ராம்தாஸ் அத்வாலே சொல்வதை எல்லாம் பெரிய கருத்தாக எடுத்துக்கொள்ள கூடாது.