சினிமா செய்திகள்

குடியுரிமை குறித்து சீண்டிய நெட்டிசன்ஸ்; சீறிய அக்‌ஷய் குமார்!

Published

on

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை இருப்பது குறித்து சமூக வலைதளத்தில் அடிக்கடி சர்ச்சைகள் கிளம்பி வருகின்றன. சமீபத்தில் மோடியுடன் அக்‌ஷய் குமார் பேட்டி எடுத்த நிலையில், மீண்டும் இந்த சர்ச்சை வைரலாக பரவி வருகிறது.

இதனால், டென்ஷனான அக்‌ஷய் குமார், தனது ட்விட்டரில் நீண்ட நெடிய விளக்கத்தை பதிவிட்டுள்ளார். கனடா குடியுரிமை குறித்து தான் ஒருபோதும் மறைத்தது இல்லை என்றும், ஏன் அடிக்கடி என் குடியுரிமை குறித்து தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்புகின்றனர் என பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியா மீது தனக்கு இருக்கும் அன்பும் தேசப்பற்றும் குறித்தும் யாருக்கும் நிரூபிக்க வேண்டிய தேவை தனக்கு இல்லை என சீறியுள்ளார்.

நாட்டில் உள்ள அனைவரும் வாக்களியுங்கள் என விழிப்புணர்வு விளம்பரங்கள் செய்த அக்‌ஷய் குமார், மும்பையில் நடந்த வாக்குப்பதிவின் போது ஏன் வாக்களிக்கவில்லை என எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, கனடா குடியுரிமை வைத்திருப்பதால், தான் அக்‌ஷய் குமார் வாக்களிக்கவில்லை என சர்ச்சைகள் கிளம்பின. இந்த நிலையில், தற்போது இந்த அறிக்கையை அக்‌ஷய் குமார் வெளியிட்டுள்ளார்.

seithichurul

Trending

Exit mobile version