கிரிக்கெட்

2ஆம் தர அணியை கூட வெல்ல முடியவில்லையே? அர்ஜூனா ரணதுங்காவுக்கு நெட்டிசன்கள் பதிலடி!

Published

on

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே தற்போது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் இலங்கை தலைநகர் கொழும்பு நகரில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற நிலையில் நேற்று நடைபெற்ற 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்திய அணி தொடரை வென்று விட்டது என்பதும் வரும் 23ஆம் தேதி நடைபெறும் போட்டியிலும் வென்று விட்டால் ஒட்டுமொத்த வெற்றியை இந்திய அணி பெற்று விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவின் ஒரு அணி ஏற்கனவே இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் நிலையில் இலங்கைக்கு அனுப்பும் இந்திய அணி புதிதாக உருவாக்கப்பட்டது என்பது தெரிந்ததே. ஷிகர் தவான் தலைமையில் ராகுல் டிராவிட் பயிற்சியில் உருவான இந்த அணி இலங்கைக்கு செல்ல தயாரானபோது இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுனா ரணதுங்கா கேலி செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இரண்டாம்தர அணியை இந்திய அணி அனுப்பி உள்ளார்கள் என்றும் இலங்கை அணிக்கு இது அவமானம் என்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரணதுங்கா கூறியது பெரும் சர்ச்சைக்குள்ளாகியது.

இந்த நிலையில் இரண்டாம்தர அணியை கூட வெல்ல முடியவில்லையே உங்களால் என நெட்டிசன்கள் அர்ஜுனா ரணதுங்காவுக்கு பதிலடி கொடுத்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் இரண்டாம்தர அணி என இருந்தாலும் இந்த அணியில் உள்ள வீரர்கள் அனைவரும் இளைஞர்கள் என்பதும் ஐபிஎல் போட்டிகளில் தங்கள் திறமையை நிரூபித்தவர்கள் என்பதும் இந்த அணி ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற பெரிய அணிகளுடன் மோதினாலும் கூட வெல்லும் திறமை உள்ள அணி என்றும் நெட்டிசன்கள் கருத்து கூறி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version