சினிமா செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸை அவமதித்த விஜய்க்கு கடவுள் கொடுத்த தண்டனையா? நெட்டிசன்கள் பதிவு

Published

on

துப்பாக்கி, கத்தி என இரண்டு வெற்றிப் படங்கள் கொடுத்த ஏஆர் முருகதாசை விஜய் அவமரியாதை செய்ததற்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் பீஸ்ட் படுதோல்வி என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

விஜய்யின் 65 வது படமாக வெளியாகி இருக்கும் பீஸ்ட் படம் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. உண்மையில் விஜய்யின் 65வது படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்குவதாக தான் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அதற்கான பணிகளும் தொடங்கிவிட்ட நிலையில் திடீரென ஏஆர் முருகதாஸ் கூறிய கதை எனக்கு பிடிக்கவில்லை என கூறி அவரை விஜய் நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக நெல்சனை விஜய் கொண்டு வந்தார் .

விஜய்யின் திரையுலக வாழ்வில் மிகச் சிறந்த படங்கள் என்றால் அவைகளில் ஒன்று துப்பாக்கி என்று கூறலாம். அப்படிப்பட்ட சூப்பர் ஹிட் வெற்றி படத்தை கொடுத்த ஏஆர் முருகதாசை அவமதிக்கும் வகையில் அவரை ஒப்பந்தம் செய்துவிட்டு அதன் பின்னர் திடீரென படத்தில் இருந்து வெளியேற்றியது விஜய் செய்த மோசமான செயல் என அப்போதே விமர்சனம் எழுந்தது.

இந்த நிலையில் தற்போது ஏ ஆர் முருகதாஸ்க்கு பதிலாக நெல்சனை வைத்து உருவாக்கப்பட்ட பீஸ்ட் படம் படு மோசமான விமர்சனங்களை சந்தித்து வந்துள்ளதை அடுத்து eஎஆர் முருகதாஸை அவமதித்ததால் விஜய்க்கு கடவுள் கொடுத்த தண்டனை தான் இந்த தோல்வி என்று கூறப்படுகிறது.

இதற்குப் பிறகாவது ஏஆர் முருகதாஸ் உடன் சமாதானம் செய்து அவரது இயக்கத்தில் ஒரு படத்தில் விஜய் நடித்து, தான் செய்த பாவத்திற்கு நிவாரணம் தேடிக் கொள்ள வேண்டும் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர்.

 

seithichurul

Trending

Exit mobile version