வணிகம்
நெஸ்ட்லே நிறுவனம் மீது ரூ.90 கோடி அபராதம்; எதற்குத் தெரியுமா?
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி ஆட்சி முறை 2017 ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
ஜிஎஸ்டி வரி முறை அமலுக்கு வந்த பிறகு, அதன் மூலம் நிறுவனங்கள் பெற்ற நன்மையை நிறுவனங்களுக்கு அளிக்க வேண்டும் என்று அரசு கூறியிறுந்தது.
ஆனால் அதன்படி நெஸ்ட்லே நிறுவனம் செயல்படவில்லை என்று காரணத்திற்காக, தேசிய ஜிஎஸ்டி இலாப எதிர்ப்பு ஆணையம் 90 ரூபாய் கோடி அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள நெஸ்ட்லே நிறுவனம் நாங்கள் அதிகபட்ச விலையைக் குறைத்து வாடிக்கையாளர்களுக்கான நன்மைகளை அளித்தோம் என்று கூறியுள்ளது.
நெஸ்ட்லே நிறுவனம் ஜிஎஸ்டி நன்மைகளை வழங்கியதாகக் கூறப்படும் வழிமுறைகள் நியாயமற்ற, தன்னிச்சையான மற்றும் சட்டவிரோதமாக உள்ளது என்று
தேசிய ஜிஎஸ்டி இலாப எதிர்ப்பு ஆணையம் கூறிவருகிறது.