சினிமா செய்திகள்

அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Published

on

அஜித் நடிப்பில் போனிகபூர் தயாரித்து வரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

பாலிவுட்டில் அமிதாப் பச்சன், டாப்ஸி மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்ற படம் பிங்க். அந்த படத்தின் தமிழ் மொழி ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை.

தமிழில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் தயாராகி வரும் இந்தப் படத்தில் அஜித், வித்யாபாலன், ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், பிக்பாஸ் அபிராமி மற்றும் பலர் நடித்துள்ளார்கள். எச்.விநோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரெய்லர் ஏற்கனவே ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அண்மையில் இந்த படத்தில் இடம்பெறும் வானில் இருள் மற்றும் காலம் பாடல் உள்ளிட்டவையும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ஆகஸ்ட் 15-ம் தேதி நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படும் நிலையில், இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரும், மறைந்த ஸ்ரீதேவியின் கணவருமான போனிகபூர் தனது டிவிட்டர் மூலம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படம் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

author avatar
seithichurul

Trending

Exit mobile version