தமிழ்நாடு

நெல்லை பள்ளி சுவர் இடிந்த வழக்கு: தாளாளர், தலைமை ஆசிரியை வழக்கில் இருந்து விடுவிப்பு

Published

on

நெல்லையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பள்ளி ஒன்றின் சுற்றுச்சுவர் இடிந்து 3 மாணவர்கள் பரிதாபமாக பலியான நிலையில் இந்த வழக்கில் இருந்து அந்த பள்ளியின் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் நெல்லையில் உள்ள பள்ளி ஒன்றின் சுற்றுச் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கி 3 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர் என்பதும் ஒரு சில மாணவர்கள் காயமடைந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பள்ளி சுற்றுச் சுவர் இடிந்தது குறித்து விசாரணை செய்த காவல்துறையினர் பள்ளி தாளாளர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியை மீது வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்க வேண்டுமென்றும் விபத்து நடப்பதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான் தங்கள் பொறுப்பை ஏற்றதாகவும் தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரணை செய்த மதுரை உயர்நீதிமன்ற கிளை தாளாளர் மற்றும் தலைமை ஆசிரியை மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version