தமிழ்நாடு

நெல்லையில் பதற்றம்: வீடுபுகுந்து முன்னாள் பெண் மேயர் வெட்டிக்கொலை!

Published

on

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் பெண் மேயர் உமா மகேஸ்வரி உட்பட மூன்று பேரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீடுபுகுந்து வெட்டிக்கொலை செய்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க மூன்று தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சியின் முன்னாள் மேயரான உமா மகேஸ்வரி தனது கணவருடன் நெல்லை ரெட்டியார்பட்டியில் வசித்துவந்தார். இவரது வீட்டில் நேற்று மாலை புகுந்த மர்ம நபர்கள் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருகசங்கரன் மற்றும் வீட்டிலிருந்த வேலைக்கார பெண் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியுள்ளனர்.

இதனால் பலத்த காயமடைந்த அவர்கள் மூவரும் சம்பவ இடத்திலேயே இரத்த வெள்ளத்தில் மரணமடைந்தனர். உமா மகேஸ்வரி திமுகவை சேர்ந்தவர் என்பதால் இந்த தகவல் அறிந்து அவரது வீட்டிற்கு முன்னர் திமுகவினர் குவிந்தனர். இதனால் பதற்றம் ஏற்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த கொலை சம்பவத்தின்போது உமா மகேஸ்வரி அணிந்திருந்த நகைகள் மாயமாகியுள்ளன. கொலையாளிகள் கத்தி மற்றும் இரும்பு ராடை பயன்படுத்தியுள்ளனர். இது நகைக்காக நடந்த கொலையா அல்லது முன்விரோதத்தால் நடந்த கொலையா என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை தொடர்பாக மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது என நெல்லை காவல் ஆணையர் பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version