இந்தியா

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

Published

on

2021 ஆம் ஆண்டின் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக சற்று முன் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த ஆண்டு நீட் தேர்வு உண்டா இல்லையா என்ற சந்தேகம் ஏற்பட்ட நிலையில் கண்டிப்பாக நீட் தேர்வு உண்டு என மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். மேலும் இந்த ஆண்டு நீட் தேர்வு செப்டம்பர் 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்டு 6ஆம் தேதி கடைசி தேதி என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 6 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 10 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை ஏற்கனவே விண்ணப்பம் செய்து இருந்தவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 10-ஆம் தேதி மாலை 5 மணி வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளதால் மாணவர்களுக்கு சற்று நிம்மதி ஏற்படுத்தியுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version