Connect with us

இந்தியா

தமிழகத்தில் மட்டுமல்ல.. பீகாரிலும் நீட் தேர்வு அழுத்தத்தால் தற்கொலை முயற்சி: அதிர்ச்சி சம்பவம்

Published

on

தமிழகத்தில் நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது தமிழகத்தை அடுத்து பிகாரிலும் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலைகள் தொடர்ச்சியாக நடந்து வருவது அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி கடந்த 2017 ஆம் ஆண்டு நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தமிழகம் மட்டும் இன்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்த நிலையில் அனிதா உச்சநீதிமன்றத்தில் சென்று வழக்கு தாக்கல் செய்தார். ஆனால் அவருக்கு சாதகமான தீர்ப்பு கிடைக்கவில்லை என்பதை அடுத்து அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து ஒவ்வொரு ஆண்டும் சில மாணவ மாணவிகள் நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து வருகின்றனர் என்பதும் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்பதை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தில் ஏற்கனவே நீட் தேர்வு அச்சம் காரணமாக பல மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது பீகார் மாநிலத்திலும் 20 வயது மாணவி ஒருவர் நீட் தேர்வு அழுத்தம் காரணமாக தற்கொலை முயற்சி செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள ஜவஹர் நகர் என்ற பகுதியில் அறை எடுத்து தங்கி நீட் தேர்வு பயிற்சி வகுப்பில் மாணவி ஒருவர் படித்து வந்தார். கடந்த இரண்டு மாதங்களாக அவர் நீட் தேர்வுக்கான பயிற்சியில் படித்து வந்த நிலையில் அவரது தந்தை நீட் தேர்வுக்கு சரியாக படிக்க வேண்டும் என அவ்வப்போது அறிவுரை கூறியதாக தெரிகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான அந்த மாணவி தன்னைத் தானே தீக்குளித்துக் கொண்டதாகவும் 60% தீக்காயங்களுடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட அந்த மாணவியின் தந்தை சஞ்சய் என்பவர் உடனடியாக தனது சொந்த ஊரிலிருந்து ஜவஹர் நகருக்கு சென்று தனது மகளை பார்த்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். நீட் தேர்வில் கவனம் செலுத்துமாறு அவரது தந்தை பலமுறை கேட்டுக்கொண்டதை அடுத்து மன அழுத்தம் காரணமாக அந்த மாணவி தற்கொலை முயற்சியில் இறங்கியதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை நீட் தேர்வு இல்லாமல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவர் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டது. ஆனால் நீட் தேர்வு என்ற முறை வந்த பிறகு நாடு முழுவதும் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தாலும் தமிழ்நாடு மட்டுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது பீகாரிலும் தற்கொலை முயற்சி சம்பவம் நடந்துள்ளதால் பீகார் மாநிலத்தில் உள்ள சமூக ஆர்வலர்களும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னால் நீட் தேர்வுக்கு தயாராகிய மூன்று மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்த நிலையில் இந்த விவகாரம் அம்மாநிலத்தில் பெரும் பிரச்சனையாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்5 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்5 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் வேலைவாய்ப்பு!

வேலைவாய்ப்பு5 மணி நேரங்கள் ago

THDC-ல் வேலைவாய்ப்பு!

செய்திகள்5 மணி நேரங்கள் ago

கர்நாடக தனியார் துறை இடஒதுக்கீடு மசோதா நிறுத்தி வைப்பு: சித்தராமையா அறிவிப்பு

வேலைவாய்ப்பு6 மணி நேரங்கள் ago

ரூ.80,000/- ஊதியத்தில் மத்திய அரசில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்21 மணி நேரங்கள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்21 மணி நேரங்கள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா5 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!