பிற விளையாட்டுகள்

ஒரே நாளில் 30 லட்சம்: நீரஜ் சோப்ராவுக்கு ஆச்சரியம் அளித்த ரசிகர்கள்!

Published

on

நடைபெற்று முடிந்த ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரசிகர்கள் 3 மில்லியன் ஃபாலோயர்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்தி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்தியாவில் நீரஜ் சோப்ராவுக்கு ஏற்கனவே பாராட்டுக்களும் பரிசுகளும் குவிந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதற்கு முன்னர் நீரஜ் சோப்ராவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு லட்சத்து 45 ஆயிரம் ஃபாலோயர்கள் இருந்த நிலையில் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்ற ஒரு சில மணி நேரத்தில் அவருடைய இன்ஸ்டாகிராம் 30 லட்சம் ஃபாலோயர்கள் நெருங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதுமட்டுமின்றி மேலும் அவருக்கு ஃபாலோயர்கள் குவிந்து வருவதால் விரைவில் 30 லட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் குவிந்து வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற வீரர் சோப்ராவுக்கு ஏற்கனவே கோடிக்கணக்கில் பரிசுகள் குவிந்து வரும் நிலையில் ரசிகர்கள் தங்களால் முடிந்த மில்லியன் கணக்கான பரிசுகளை நீரஜ் சோப்ராவுக்கு பரிசாக கொடுத்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

seithichurul

Trending

Exit mobile version