தமிழ்நாடு
குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை: முழு விபரங்கள்!
இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 11,78,163 பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அனைவரும் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து இருந்தனர் .
விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஏன் தேர்வு எழுதவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும், வருங்காலத்தில் விண்ணப்பம் செய்த அனைவரையும் தேர்வு எழுத வைக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.