தமிழ்நாடு

குரூப் 2, 2ஏ தேர்வை 1.83 லட்சம் பேர் எழுதவில்லை: முழு விபரங்கள்!

Published

on

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 தேர்வுகள் நடைபெற்ற நிலையில் இந்த தேர்வை விண்ணப்பம் செய்தவர்களில் 1.83 லட்சம் பேர் எழுத வில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற குரூப் 2 தேர்வை 11,78,163 பேர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் அனைவரும் ஹால் டிக்கெட்டை டவுன்லோட் செய்து இருந்தனர் .

ஆனால் இந்த தேர்வை 19,94,878 பேர்கள் மட்டுமே எழுதியுள்ளனர் என்றும், 1,83,285 பேர் தேர்வை எழுதவில்லை என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

விண்ணப்பித்தவர்களில் கிட்டத்தட்ட இரண்டு லட்சம் பேர் ஏன் தேர்வு எழுதவில்லை என்பது குறித்து ஆய்வு செய்ய இருப்பதாகவும், வருங்காலத்தில் விண்ணப்பம் செய்த அனைவரையும் தேர்வு எழுத வைக்க விழிப்புணர்வை ஏற்படுத்துவோம் என்றும் டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

seithichurul

Trending

Exit mobile version