தமிழ்நாடு

இன்று ஒரே நாளில் தமிழகத்திற்கு வந்த சுமார் 5 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள்!

Published

on

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு அனைத்து மக்களுக்கும் தடுப்பூசி போடுவதில் தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை தமிழக அரசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் முன்வந்து தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி தட்டுப்பாடு அவ்வப்போது ஏற்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு உடனடியாக தமிழகத்திற்கு போதுமான தடுப்பூசிகளை அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வந்தது

இந்த நிலையில் தமிழ்நாட்டிற்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும் தமிழ்நாடு அரசு நேரடியாக கொள்முதல் செய்தும் 1 கோடியே 92 லட்சம் கோவிஷீல்டு மற்றும் கோவக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன என்றும், இதுவரை சுமார் 1 கோடியே 86 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர் என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

மேலும் புனேவில் இருந்து இன்று விமானத்தில் வந்த 12 பெட்டிகளில் 1 லட்சத்து 44 ஆயிரம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இவை தேனாம்பேட்டையில் உள்ள மாநில சுகாதார கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது.

அதே விமானத்தில் 28 பெட்டிகளில் 3 லட்சத்து 36 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுப்பிற்காக பெரியமேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டது. தடுப்பூசிகள் தேவைப்படும் மாவட்டங்களுக்கு உடனே பிரித்து அனுப்பி வைக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

seithichurul

Trending

Exit mobile version