Connect with us

தமிழ்நாடு

சனி, ஞாயிறு 2 நாட்களில் சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் பயணமா?

Published

on

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இன்று முதல் இரண்டு வாரங்களுக்கு தமிழகத்தில் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து நேற்றும் நேற்று முன்தினமும் தமிழகம் முழுவதும் அனைத்து கடைகளும் திறந்திருந்தன என்பதும் தமிழகம் முழுவதும் 24 மணி நேரமும் பேருந்து சேவைகள் இயக்கப்பட்டன என்பதும் தெரிந்ததே.

குறிப்பாக சென்னையில் இருந்து தங்களுடைய சொந்த ஊர் செல்லும் மக்களுக்கு வசதியாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும் அந்த பேருந்துகளில் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள தகவலின்படி சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் சென்னையில் இருந்து இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மூலம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 450 பேர் பயணம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக ரயில்களிலும் விமானங்களிலும் சொந்த வாகனங்களிலும் ஆயிரக்கணக்கானோர் சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்று உள்ளதால், சென்னையில் இருந்து சென்றவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என்று கூறப்படுகிறது.

சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு பொது மக்கள் சிரமமின்றி பயணம் செய்ய ஏதுவாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களில் மட்டும் தமிழகம் முழுவதும் 34 ஆயிரத்து 619 பேருந்துகள் இயக்கப்பட்டன என்பதும், இதில் சென்னையிலிருந்து மற்றும் 9626 பேருந்துகள் இயக்கப்பட்டதாகவும் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் இன்று முதல் பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதை அடுத்து பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், சாலைகள் ஆகியவை வெறிச்சோடி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிடம்56 நிமிடங்கள் ago

இன்றைய ராசி பரிகாரம் பலன்கள் (ஜூலை 18, 2024):

ஆரோக்கியம்1 மணி நேரம் ago

ரொட்டி வாங்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்:

தமிழ்நாடு1 மணி நேரம் ago

பாரம்பரியத்தை போற்றுவோம் – தமிழ்நாடு தின வாழ்த்துக்கள் !

தினபலன்2 மணி நேரங்கள் ago

இன்றைய ராசி பலன்கள் – ஜூலை 18, 2024 (வியாழக்கிழமை)

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

சிவபெருமானுக்கு பிடித்த ராசிகள்: உண்மை என்ன?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கேஸ் சிலிண்டரை 2 மாதத்திற்கும் மேல் நீடிக்க வைக்கும் சில டிப்ஸ்: மழைக்காலத்திற்கு சிறப்பு டிப்ஸ்:

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

கொசுக்கள்: இரத்தம் குடிப்பதற்கும், நோய்களை பரப்புவதற்கும் காரணம் என்ன?

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ஆடி மாதம்: சுபகாரியங்கள் செய்யலாமா? செய்ய கூடாதா?

வேலைவாய்ப்பு9 மணி நேரங்கள் ago

ரூ.1,09,740/- ஊதியத்தில் JIPMER ஆணையத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

ஆரோக்கியம்9 மணி நேரங்கள் ago

கேரள சுவையில் நெத்திலி மீன் அவியல்: ஒரு சுவையான ரெசிபி!

ஆன்மீகம்1 நாள் ago

மொகரம் பண்டிகை: வரலாறு, முக்கியத்துவம் மற்றும் கொண்டாட்டங்கள்!

பல்சுவை1 நாள் ago

மொஹரம் வாழ்த்து அட்டைகள்! உடனே பதிவிறக்குங்கள் மற்றும் பகிருங்கள்!

பர்சனல் ஃபினான்ஸ்4 நாட்கள் ago

என்.பி.எஸ் vs மியூச்சுவல் ஃபண்டுகள்: ஓய்வுகால திட்டமிடலுக்கு எது பெஸ்ட்!

ஆன்மீகம்1 நாள் ago

பெண்கள் மெட்டி அணிவதன் பின்னால் ஜோதிட ரகசியம்

உலகம்1 நாள் ago

உங்களுக்கும் உங்கள் அன்புக்குரியவர்களுக்கும் முஹர்ரம் நல்வாழ்த்துக்கள்!

தமிழ்நாடு6 நாட்கள் ago

கேரளாவின் “லிட்டில் கைட்” திட்டத்தை போன்று தமிழ்நாடு அரசின் முயற்சிகள்!

வணிகம்2 நாட்கள் ago

கேரள வின் வின் W-778 லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட்டது! யாருக்கு ரூ.75 லட்சம் பரிசு?

பல்சுவை4 நாட்கள் ago

கேரளா ஸ்டைல் தலசேரி பிரியாணி செய்வது எப்படி?

சினிமா6 நாட்கள் ago

கல்கி படம் ஆகஸ்ட் 15-ல் ஓடிடி-யில் வெளியீடு!

டிவி5 நாட்கள் ago

TRP-யில் முதல் இடத்தை பிடித்தது சிறகடிக்க ஆசை! சிங்கப்பெண்ணே இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது!