இந்தியா
மகாரஷ்டிராவில் ஒரே நாளில் 16 ஆயிரம் பேருக்கு கொரோனா: 8 நகரங்களில் ஊரடங்கு!
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் மீண்டும் மிக வேகமாக பரவி வருகிறது. தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்பட 5 மாநிலங்களில் சுமார் 80 சதவீதத்திற்கும் அதிகமான கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் இதனை அடுத்து இந்த ஐந்து மாநிலங்களில் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் சமீபத்தில் மத்திய அரசின் சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் மகாராஷ்ட்ராவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. நேற்று ஒரே நாளில் மகாராஷ்டிராவில் சுமார் 16 ஆயிரம் பேர்க்ள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அம்மாநிலத்தில் உள்ள 8 நகரங்களில் இரவு நேர முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் மும்பை நகருக்கு மட்டும் இரவு ஊரடங்கு இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிர மாநிலத்தில் 15 ஆயிரத்து 800க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் இதுவரை 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.