சினிமா செய்திகள்

படகோட்டி பெண்ணாக நடிக்க சம்மதிப்பாரா நயன்தாரா?

Published

on

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகவுள்ள பொன்னியின் செல்வன் படம் விரைவில் ஆரம்பிக்க உள்ளது. படத்தில் ஏகப்பட்ட முக்கிய கதாபாத்திரங்கள் இருப்பதால், பெரிய நட்சத்திரங்களை வைத்து எடுக்க மணிரத்னம் முயற்சி செய்து வருகிறார்.

வில்லி கேரக்டருக்கு ஐஸ்வர்யா ராயிடம் பேசியுள்ள மணிரத்னம், படகோட்டி பெண் பூங்குழலி கதாபாத்திரத்திற்கு நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது.

சமுத்திர குமாரி என்னும் புனைப்பெயர் கொண்ட பூங்குழலி கதாபாத்திரம், பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில், வீரம் மிக்க பெண்ணாகவும், ராஜராஜ சோழன், வந்தியத்தேவன் போன்ற முக்கிய கதாபாத்திரங்களுக்கு உதவி செய்யும் கதாபாத்திரம் ஆகும்.

இதற்கு, நயன்தாரா நல்ல தேர்வாக இருப்பார் என்று எண்ணிய மணிரத்னம், அந்த கதாபாத்திரத்திற்கு அணுகியுள்ளர். ஆனால், குந்தைவை தேவியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாலும், வெயிட்டான பழுவூர் ராணி நந்தினி ரோலில் ஐஸ்வர்யா ராய் நடிக்க உள்ளதாலும், படகோட்டி பெண் கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாரா ஒத்துக் கொள்வாரா என்பது சந்தேகம் தான்.

மேலும், வானதி கதாபாத்திரத்திற்கு யாரை தேர்வு செய்ய உள்ளார் மணிரத்னம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Trending

Exit mobile version